மத்தியப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரை மூக்கால் அங்கிருந்தவர்களின் காலணிகளைத் துடைக்க சொல்லி வற்புறுத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிறன்று மாண்ட்சரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் ஒரு இளைஞனை சாலையோரம் அமரவைத்து, அங்கு வருபவர்களின் காலணியை எல்லாம் தனது மூக்கால் துடைக்கச் சொல்லி கொடுமைப் படுத்தினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட இளைஞனை ஒரு வாரமாகியும் காணாததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.